கல்வி

கல்வி
ஒவ்வொரு குடிமகனின் மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கும், ஆரம்ப கல்வியே அடித்தளமாக அமைக்கிறது. தற்போதைய கடந்த காலத்தில், இந்தியா ஆரம்ப கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவையாவன; ஆரம்ப கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், பாதியில் விட்டுச்செல்லாமல் கல்வியை தொடர்வது, ஒழுங்காக பள்ளிக்கு வருதல் மற்றும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு கல்வியை விரிவு படுத்துதல் ஆகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இந்தியாவின் மேம்பட்ட கல்வி திட்டங்களே பெரும் பங்கினை வகிக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் தொடக்கநிலை கல்வியின் தரமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.Image result for ssa
இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தின்படி குழந்தைகளுக்கு பதினான்கு வயது வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில், தற்போது பாராளுமன்றம், கல்வி உரிமை விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி 6 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்டை உரிமையாகும். இந்த நேர்த்தியான இலக்கான, எல்லாருக்கும் தொடக்ககல்வி கிடைக்கச் செய்தலை (அதாவது எல்லா பகுதிகளிலும் உள்ள, 100 சதவீதம் குழந்தைகளும் தொடக்க கல்விக்கு பதிவு செய்தல் மற்றும் யாரும் விட்டுச் செல்லாமல் இருத்தல்), இன்னும் இந்தியா அடையவில்லை. இந்த இலக்கை அடையவே, அரசானது 2001-ல் சர்வ சிக்ஷா அபியான் என்னும் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறுவியது.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ICT யானது, குறிப்பாக கிராமபுற இந்தியாவில் கல்வி அமைப்பில் இருக்கும் மற்றும் இல்லாத வசதிகளை சரி செய்து வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய அறிவுபூர்வமான செய்திகளை வழங்கி, தொடக்க கல்வியை எல்லாருக்கும் கிடைக்க செய்வதற்கான முயற்சியை, இந்தியா டெவலப்மென்ட் கேட்வேயின், ஆரம்ப கல்வி முகவையானது புரிந்துவருகிறது

குழந்தைகளின் உரிமைகள்

கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின்  அடிப்படை மனித உரிமை. இது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

கொள்கைகள் / திட்டங்கள்

21A பிரிவை சேர்ந்த 86-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி 6 முதல் 14 வயது வரையுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்