Posts

Showing posts from October, 2017

பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா

பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.  மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்சார்பில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்பாக படிக்கும், மீத்திறன் கொண்ட மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில், கல்வி சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு, 100 பேர் வீதம், 3,200 பேர், வெளிமாநிலங்களுக்கு, இரண்டு நாட்கள் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர். இவர்களின் பயணச்செலவை, ரயில்வே துறை பொறுப்பேற்கிறது. தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவினங்களுக்கு, தலா 2,000 ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் கண்ணன் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவிடப்பட்டுள்

மாவட்டந்தோறும் உதயமாகிறது "ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடம்" விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

மாவட்டந்தோறும் உதயமாகிறது "ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடம்" விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !! மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் செயல்படும் “ஜவஹர்நவோதயா பள்ளிக்கூடங்கள்” தமிழகத்தில் மாவட்டந்தோறும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.   இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பள்ளியை நிர்வகிக்கும் நவோதயா வித்யாலயா சமிதிஅமைப்பு, சமீபத்தில் விடுத்த அறிக்கையின்படி, “தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயப்பாடமாக இருக்காது. மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் படிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது. ஆதலால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பதில் பெருமளவு தடைகள் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது.மேலும், மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளுக்கான நிலம் ஒதுக்கீடு, மாநில அரசின் கல்விக்கொள்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிக்கூடம் தொடங்கப்படலாம் என பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக அமைச்சரவை விரைவில்  கூட உள்ளநிலையில், அப்போது, இந்த விவகாரம் குறித்து இறுத

அக்டோபர் மாதத்துக்குள் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இணையதள சேவை..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

அக்டோபர் மாதத்துக்குள் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இணையதள சேவை..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள சேவை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் சமீபகாலமாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் உள்ளது என்று தொடச்சியாகப் புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதையடுத்து, பாடத்திட்டங்கள் மாற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'பாடத்திட்டம் மாற்றம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.நவம்பர் மாத இறுதிக்குள் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும். வரைவுப் பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள்கள் வரை மக்கள் கருத்து கூறலாம். அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் 5 மரக் கன்றுகள் நட்டால், 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். அரசின் அனைத்துப் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும்' எ

'ஆதார்' எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

'ஆதார்' எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, 'ஆதார்' எண் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, 'ஆன் - லைனில்' பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.மிக முக்கியமாக, மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்யவேண்டியது கட்டாயம். ஆதார் இல்லாவிட்டால், ஆதார் எடுப்பதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும்; அதுவும் இல்லாவிட்டால், அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்து, சுய உறுதிமொழி படிவம் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை

மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை வரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரைக்கை சட்டை மற்றும் பேன்ட்; மாணவியருக்கு, சுடிதார் வழங்கப்படுகிறது.வரும் கல்வியாண்டு முதல், சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை, ஒரு வகை சீருடையும்; 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு வகையும்; 9 முதல், பிளஸ் ௨ வரை மற்றொரு வகை என, தனித்தனி சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவர்களுக்கு, சீருடை மாற்றப்படுகிறது. குளிரிலிருந்து தப்பிக்க, மாணவர்களுக்கு முழுக்கை சட்டை, பேன்ட்; மாணவியருக்கு, சல்வார் கமீஸ் உடையும், அதற்கு மேல் சட்டையும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறினர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு ₹25000/- லிருந்து ₹72000/- ஆக உயர்வு - அரசாணை நிலை

Image
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு ₹25000/- லிருந்து ₹72000/- ஆக உயர்வு - அரசாணை நிலை எண்: 56 நாள்: 26.09.2017

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், துவங்கி வைத்தார். இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிமுடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார். இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்

பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.   தமிழகத்தில், அடுத்த சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த காலத்தில், பெரும்பாலும், மின் கசிவால் உயிரிழப்புகள் ஏற்படும். இது போன்ற பாதிப்புகளை தடுக்க, பள்ளிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன் விபரம்: ● அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கட்டட மின் இணைப்பை சரிபார்க்க வேண்டும். புவி ஈர்ப்பு கம்பிகள், செயல்பாட்டில் உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும் ● சுவிட்சுகள், மின் விசிறி, கணினி, ஆய்வக மின் கருவிகள் போன்றவற்றில், மின் இணைப்பு சரியாக உள்ளதாக என, சோதிக்க வேண்டும். பள்ளி கட்டடத்துக்குள் செல்லும், மின் கேபிள்களில் சேதம் ஏற்பட்டு, மின் கசிவு ஏற்படுகிறதா என, ஆய்வு செய்ய வேண்டும் ● மின் கம்பத்திலிருந்து, பள்ளி கட்டடத்துக்கு, மின் வினியோகம் செய்யப்படும் குறைந்த மின்னழுத்த கம்பிகளில் சேதம் உள்ளதா, அவற்றில் மரங்கள் உரசுகிறதா என்பதை, மின் வாரிய ஊழியர்

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல்  துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை  அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள். இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  ‘கூடு’ (NEST) என்ற பெயரில் அகில இந்திய அளவில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடக்க உள்ளது.   இந்தப் போட்டி 5 வகுப்பு மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இன்னொரு பிரிவாகவும்  பிரிக்கப்பட்டுள்ளனர்.  போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்ப அஞ்சல் தலையின்  மாதிரியை ஏ4 தாளில்  வரைந்து  உதவி தலைமை இயக்குநர் (ஏடிஜி-அஞ்சல்தலை சேகரிப்பு), அறை எண்:108,  டாக் பவன், புதுடெல்லி - 110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாதிரிகள் அஞ்சல் தலைகளாகவும், சிறப்பு அஞ்சல் உறைகளும் வெளியிட பயன்படுத்திக் கொள்ளப்படும். அஞ்சல்தலை மாதிரிகளை அக்.20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு

அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 2008 முதல், 2012 அக்., வரை எழுதியவர்களில் பலர், தங்கள் சான்றிதழ்களை கோராமல் உள்ளனர். அவற்றை அழிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.அதனால், அக்., 31 வரை, அந்த சான்றிதழை பெற, அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், பெயர்,பதிவெண், தேர்வு மையம், ஆண்டு, மாதம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்படும். இனி வரும் காலங்களில், இரண்டு ஆண்டு முடிந்த பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், முன்னறிவிப்பு இன்றி அழிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

DEE - பள்ளி வேலை மற்றும் விடுமுறை விபரப்பட்டியல் 2017 - 18 | தொடக்க கல்வித்துறை

Image
DEE - பள்ளி வேலை மற்றும் விடுமுறை விபரப்பட்டியல் 2017 - 18 | தொடக்க கல்வித்துறை 

தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி 2017 - 18 | பள்ளிகளைப் பங்கேற்கச் செய்தல் திட்டத்தில் உங்களது பள்ளியினை பதிவு செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.

Image
Swachh Bharat Swachh Vidyalaya Puraskar 2017 - Mobile App Download and Instructions  தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி  2017 - 18 | பள்ளிகளைப் பங்கேற்கச் செய்தல்  திட்டத்தில் உங்களது பள்ளியினை பதிவு செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.  முதலில் Play store சென்று https://play.google.com/store/apps/details?id=com.glt.sv என்ற Link ஐ Clik செய்து App ஐ Download செய்து கொள்ளுங்கள். App ஐ Open செய்து Register என்பதை Click செய்து உங்களது பள்ளியின் UDISE Number கொடுத்த பின் உங்களது பள்ளியின் பெயர் அதில் தெரியவரும். அதனை தொடர்ந்து கீழ் வரும் சில வினாக்களுக்கு பதில் அளித்து இறுதியில் Register என்பதை Click செய்யவும். இப்போது தங்களது பள்ளி பதிவு செய்யப்பட்டுவிட்டது. சிறுது நேரத்தில் நீங்கள் கொடுத்த Mobile Number க்கு SMS மூலமாக PASSWORD வரும் அதனை கவனமாக SAVE செய்து வைத்துக் கொள்ளவும். மீண்டும் Appஐ Open செய்ய இந்த Password அவசியம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பகுதிகளையும் Open செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித

30.09.2017-ன் படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் விவரங்கள் ( துறை மற்றும் வயது வாரியாக...

Image

SSA - மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்

SSA - மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்"தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த கணக்கெடுப்பு- பள்ளிகளை பங்கேற்கச் செய்தல் அறிவுரைகள் வழங்கி - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!!