நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது.தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டதுஎன்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்திருந்தது.

இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது.இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்’ முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது.

அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்என்று உத்தர விட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் ‘வந்தே மாதரம்’ பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவுதேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர்.

Comments

Popular posts from this blog

Tamil Books FAQ | How to Order? | Contact Us | About Us | Feedback | Bookmark and Share வணக்கம், நண்பரே!., Welcome to world's leading Tamil books online shopping store. Checkout all time top sellers, Top Selling Tamil books. Login | Signup | Forgot Password HOMEBOOKSAUTHORSPUBLISHERSNEWSBOOK REVIEWSBOOK RELEASEE-BOOKSBLOG வரலாறு போற்றும் தலைவர்கள் - Varalaru Potrum Thalaivargal Varalaru Potrum Thalaivargal - வரலாறு போற்றும் தலைவர்கள் வகை : வரலாறு (Varalaru) எழுத்தாளர் : முத்தரசன் பதிப்பகம் : தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication) ISBN : Pages : 144 பதிப்பு : 2 Published Year : 2010 விலை : ரூ.50 In Stock , Delivered in 2-3 business days Buy now Add to Mylibrary Add to Wishlist0 கருத்துக்கள் வரலாறு படைத்த நெப்போலியன் வர்மக்கலை (புதுமையான தற்காப்பு முறைகள்) நூல்களை தேடுங்கள் .... Press Ctrl+g to toggle between English and Tamil Type in English and give space to get Tamil word Find Tamil Book SHOPPING CART You have no items in your shopping cart.